"யாகவராயினும் நாகாக்க" என்பது வள்ளுவன் வாக்கு. யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும், பிறர் மனம் புண்படும்படியோ, அவமானபடுத்தும் விதமாகவோ கடும்சொர்களை பயன்படுத்தகூடாது என்கிறான் வள்ளுவன்.
என்னை பொறுத்தவரை நாவடக்கம் என்பது பேசும்போது மட்டுமல்ல சாப்பிடும்போதும் தேவை . ஆம், எப்பவுமே நம் வயிற்றுக்கு என்ன தேவையோ அதை சாப்பிட வேண்டுமே தவிர, நாவிற்கு தேவையானதை சாப்பிட கூடாது. சரியான அளவில், சரியான நேரத்தில், சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்தால் என்றுமே ஆரோக்யத்துடனும், இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாளும் இனிய நாளாக பெற முடியும்.
சுத்தி வளைச்சது போதும், நான் நேரா விஷயத்துக்கு வரேன், நம்ம பிரெண்ட் "சொக்கு" இருக்கானே, சரியான சாப்பாட்டு ராமன். எப்ப, எந்த ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும், இவன் கேட்கும் மொத கேள்வி, "மீல்ஸ் லிமிட்டா, அன்லிமிட்டா" ? சர்வர், "லிமிடட் மீல்ஸ் தான் சார்" என்று சொன்னால் உடனே வரும் அடுத்த கேள்வி, "எக்ஸ்ட்ரா மீல்ஸ் எவ்ளோ" ?. அட ஏங்க, ஒரு தடவ தலப்பாக்கட்டு போயிட்டு அங்கயும்," ஏம்பா, பிரயாணி அன்லிமிட்டெட் தான" என்று கேட்டு வைத்தான். சர்வர் கடுப்புடன் முறைக்க இவன் சங்கடமேபடாம நம்மை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்.
சில ஐடம் டேஸ்ட் நல்லா இருந்துட்டா, அதையே ரெண்டு தடவ ஆர்டர் பண்ணி சாப்பிடுவான், காலை வேலையில் ரெண்டு பொங்கல், ரெண்டு செட் பூரி சாப்பிட்டுவிட்டு, சர்வர் "பில் கொன்டுவரட்டுமா" என்று கேட்கும் போது, வயற்றை தடவிக்கொண்டே ஏதோ டயட்டில் இருப்பவன் போல், ஒரே ஒரு தோசை என்று சொல்லி, சர்வர் முகத்தில் தெரியும் அதிர்ச்சியை ரசிப்பான்.
ஒரு நாள் இவனிடம் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்தோம். வேலைக்கு மத்தியில், மச்சி ஒரு டீ, சாப்பிடலாமா? என்றான்.
மணி மூன்ற தாண்டா ஆகுது, இப்பதாண்டா சாப்டோம் அதுக்குள்ளே ஏன்டா?
இல்ல மச்சி, "மதியம் சாப்பிட்டது சரியாய் செரிக்கள, அதான்"..
சரி என்று அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று, ரெண்டு டீ என்று நான் சொல்ல, மச்சி எனக்கு காபி என்றான். சரி, ஒரு டீ ஒரு காபி என்று சொல்ல வந்தால், மச்சி "இங்கே வேண்டாம், அதோ அங்க போனா, நல்ல பில்ட்டர் காபி சாப்பிடலாம்" என்று எதிரில் இருந்த உயர்தர சைவ ஹோட்டலை காட்டினான். ஆஹா, பத்து ரூவாய்ள, முடிச்சிடலாம்னு பார்த்தா அங்க காபி 20 30 ரூவா சொல்வானே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சரி என்றேன்.
கடைக்குள் போனதும், மச்சி, "காபிக்கு முன்னாடி ஒரு பஜ்ஜி" என்று சொல்லிவிட்டு என் தலையசைபிற்கு காத்திராமல், அவனே ஒரு ப்ளேட் பஜ்ஜி ஒரு ப்ளேட் போண்டா என்று ஆர்டர் செய்துவிட்டு என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான். மனதில் கருவிக்கொண்டே நானும் காத்திருக்க சர்வர் வந்து நீட்டிய ப்ளேட்டில் திருப்பதி லட்டு சைசில் 4 போண்டா , கல்லு கட்டி வளர்த்த பொடலங்கா சைசில் 4 பஜ்ஜி. அதிர்ச்சியடைந்த நான், "ஏம்பா ஒரு ப்லேட்டுணா 2 தானே" என்று கேட்க, "இல்ல சார் இங்க நாளுதான் வரும்" என்றான். (புது டெக்னிக்கா இருக்கே ? உக்காந்து யோசிப்பாங்களோ).. "ஏன்டா, எதாவது ஒன்ன கான்செல் பண்ணிடலாமா" என்றால் சொக்குவோ, "இருக்கட்டும் மச்சி சாப்டரலாம்" என்று அதே அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.
" இவ்ளோ பெருசா? எப்டி போட்டுருப்பாங்க !!" என்று நினைத்துகொண்டே நான் கஷ்டப்பட்டு ஒரு பஜ்ஜியையும் ஒரு போண்டாவையும் சாப்டு முடிக்கறதுக்குள்ள, சொக்கு, மிச்சம் இருந்த 3 பஜ்ஜி, 3 போண்டாவா உள்ள தள்ளிட்டு, "தம்பி, காபி இன்னும் வரல" என்று சர்வரிடம் கடுகடுத்தான்..
எப்பவும், யார்கூட சாப்ட போனாலும், முடியும் நேரத்தில், "வேற எதாவது வேணுமா" என்று கேட்கும் நான், இவனிடம் அது மாதிரி கேட்டு பல தடவ அனுபவபட்டிருப்பதால், அவன் காபி உருஞ்சும் போதே சர்வரிடம் பில் என்று சிக்னல் செய்தேன். வந்த பில்லோ 175 ரூவாய், நான் அதிர்ச்சியில் சொக்குவ முறைக்க அவன் முகத்தில் அதே அசட்டு சிரிப்பு. சரி, தலைவிதியேன்னு பர்சை திறந்தாள், அதில் இருந்தது வெறும் 90 ரூவாய். அட பாவி, "போன மாசம் வீட்டுக்கு FRIDGE வாங்கும்போது கூட புல்லா cash கொடுத்து தாண்டா வாங்கினேன், கேவலம் ஒரு காபிக்கு போய் கார்டு தேக்க வச்சிட்டியேடா" என்று கத்திகொண்டே செட்டில் செய்தேன்.
வெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்யும்போது, "ஏன்டா நாயே, இவ்ளோ திங்கரியே, உனக்கெல்லாம் பேதியே போகாதா" ? என்றேன்.
"இல்ல மச்சி, தலைலேர்ந்து கால் வரைக்கும் எல்லா நோயும் வந்து போயிருக்கு மச்சி, ஆனா பேதி மட்டும் எனக்கு போனதே இல்லடா" என்றான் பெருமையாக.
நிஜமாவாடா ? ...
நிசமா மச்சி.
"நாளைக்கு போகும், சத்தியமா போகுண்டா" .......
என்னை பொறுத்தவரை நாவடக்கம் என்பது பேசும்போது மட்டுமல்ல சாப்பிடும்போதும் தேவை . ஆம், எப்பவுமே நம் வயிற்றுக்கு என்ன தேவையோ அதை சாப்பிட வேண்டுமே தவிர, நாவிற்கு தேவையானதை சாப்பிட கூடாது. சரியான அளவில், சரியான நேரத்தில், சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்தால் என்றுமே ஆரோக்யத்துடனும், இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாளும் இனிய நாளாக பெற முடியும்.
சுத்தி வளைச்சது போதும், நான் நேரா விஷயத்துக்கு வரேன், நம்ம பிரெண்ட் "சொக்கு" இருக்கானே, சரியான சாப்பாட்டு ராமன். எப்ப, எந்த ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும், இவன் கேட்கும் மொத கேள்வி, "மீல்ஸ் லிமிட்டா, அன்லிமிட்டா" ? சர்வர், "லிமிடட் மீல்ஸ் தான் சார்" என்று சொன்னால் உடனே வரும் அடுத்த கேள்வி, "எக்ஸ்ட்ரா மீல்ஸ் எவ்ளோ" ?. அட ஏங்க, ஒரு தடவ தலப்பாக்கட்டு போயிட்டு அங்கயும்," ஏம்பா, பிரயாணி அன்லிமிட்டெட் தான" என்று கேட்டு வைத்தான். சர்வர் கடுப்புடன் முறைக்க இவன் சங்கடமேபடாம நம்மை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்.
சில ஐடம் டேஸ்ட் நல்லா இருந்துட்டா, அதையே ரெண்டு தடவ ஆர்டர் பண்ணி சாப்பிடுவான், காலை வேலையில் ரெண்டு பொங்கல், ரெண்டு செட் பூரி சாப்பிட்டுவிட்டு, சர்வர் "பில் கொன்டுவரட்டுமா" என்று கேட்கும் போது, வயற்றை தடவிக்கொண்டே ஏதோ டயட்டில் இருப்பவன் போல், ஒரே ஒரு தோசை என்று சொல்லி, சர்வர் முகத்தில் தெரியும் அதிர்ச்சியை ரசிப்பான்.
ஒரு நாள் இவனிடம் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்தோம். வேலைக்கு மத்தியில், மச்சி ஒரு டீ, சாப்பிடலாமா? என்றான்.
மணி மூன்ற தாண்டா ஆகுது, இப்பதாண்டா சாப்டோம் அதுக்குள்ளே ஏன்டா?
இல்ல மச்சி, "மதியம் சாப்பிட்டது சரியாய் செரிக்கள, அதான்"..
சரி என்று அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று, ரெண்டு டீ என்று நான் சொல்ல, மச்சி எனக்கு காபி என்றான். சரி, ஒரு டீ ஒரு காபி என்று சொல்ல வந்தால், மச்சி "இங்கே வேண்டாம், அதோ அங்க போனா, நல்ல பில்ட்டர் காபி சாப்பிடலாம்" என்று எதிரில் இருந்த உயர்தர சைவ ஹோட்டலை காட்டினான். ஆஹா, பத்து ரூவாய்ள, முடிச்சிடலாம்னு பார்த்தா அங்க காபி 20 30 ரூவா சொல்வானே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சரி என்றேன்.
கடைக்குள் போனதும், மச்சி, "காபிக்கு முன்னாடி ஒரு பஜ்ஜி" என்று சொல்லிவிட்டு என் தலையசைபிற்கு காத்திராமல், அவனே ஒரு ப்ளேட் பஜ்ஜி ஒரு ப்ளேட் போண்டா என்று ஆர்டர் செய்துவிட்டு என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான். மனதில் கருவிக்கொண்டே நானும் காத்திருக்க சர்வர் வந்து நீட்டிய ப்ளேட்டில் திருப்பதி லட்டு சைசில் 4 போண்டா , கல்லு கட்டி வளர்த்த பொடலங்கா சைசில் 4 பஜ்ஜி. அதிர்ச்சியடைந்த நான், "ஏம்பா ஒரு ப்லேட்டுணா 2 தானே" என்று கேட்க, "இல்ல சார் இங்க நாளுதான் வரும்" என்றான். (புது டெக்னிக்கா இருக்கே ? உக்காந்து யோசிப்பாங்களோ).. "ஏன்டா, எதாவது ஒன்ன கான்செல் பண்ணிடலாமா" என்றால் சொக்குவோ, "இருக்கட்டும் மச்சி சாப்டரலாம்" என்று அதே அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.
" இவ்ளோ பெருசா? எப்டி போட்டுருப்பாங்க !!" என்று நினைத்துகொண்டே நான் கஷ்டப்பட்டு ஒரு பஜ்ஜியையும் ஒரு போண்டாவையும் சாப்டு முடிக்கறதுக்குள்ள, சொக்கு, மிச்சம் இருந்த 3 பஜ்ஜி, 3 போண்டாவா உள்ள தள்ளிட்டு, "தம்பி, காபி இன்னும் வரல" என்று சர்வரிடம் கடுகடுத்தான்..
எப்பவும், யார்கூட சாப்ட போனாலும், முடியும் நேரத்தில், "வேற எதாவது வேணுமா" என்று கேட்கும் நான், இவனிடம் அது மாதிரி கேட்டு பல தடவ அனுபவபட்டிருப்பதால், அவன் காபி உருஞ்சும் போதே சர்வரிடம் பில் என்று சிக்னல் செய்தேன். வந்த பில்லோ 175 ரூவாய், நான் அதிர்ச்சியில் சொக்குவ முறைக்க அவன் முகத்தில் அதே அசட்டு சிரிப்பு. சரி, தலைவிதியேன்னு பர்சை திறந்தாள், அதில் இருந்தது வெறும் 90 ரூவாய். அட பாவி, "போன மாசம் வீட்டுக்கு FRIDGE வாங்கும்போது கூட புல்லா cash கொடுத்து தாண்டா வாங்கினேன், கேவலம் ஒரு காபிக்கு போய் கார்டு தேக்க வச்சிட்டியேடா" என்று கத்திகொண்டே செட்டில் செய்தேன்.
வெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்யும்போது, "ஏன்டா நாயே, இவ்ளோ திங்கரியே, உனக்கெல்லாம் பேதியே போகாதா" ? என்றேன்.
"இல்ல மச்சி, தலைலேர்ந்து கால் வரைக்கும் எல்லா நோயும் வந்து போயிருக்கு மச்சி, ஆனா பேதி மட்டும் எனக்கு போனதே இல்லடா" என்றான் பெருமையாக.
நிஜமாவாடா ? ...
நிசமா மச்சி.
"நாளைக்கு போகும், சத்தியமா போகுண்டா" .......
இந்தப் பதிவு அருமை. நகைச்சுவை ததும்ப எழுதி இருப்பது சிறப்பு.
ReplyDelete-- www.piramu.tk
உங்களின் இந்தப் பதிவு பிடித்திருக்கிறது.
ReplyDeleteThank you vasi..
ReplyDelete